Saturday, 11 June 2016

வைணவ ஆசார்ய வைபவம்


vaishnaval copy
வைணவசமயம்மிகத்தொன்மையானது. வேத காலத்திலேயே அது நிலைபெற்றிருக்கிறது. விஷ்ணுவை ‘உபேந்திரன்’ என்று இருக்குவேதம்கூறுகிறது. விஷ்ணு என்ற சொல்லிலிருந்துதான் வைணவம் என்ற சொல் தோன்றியது. சங்கநூல்களுக்கெல்லாம் முந்திய தொல்காப்பியத்தில் ‘மாயோன்மேயகாடுறைஉலகமும்’ என்று வருகிறது. மாயோன்என்பதுதிருமாலையேகுறிக்கும். பண்டைய தமிழகத்தின் முல்லைநில மக்கள் மாயோனைத் தெய்வமாக விளங்கினர்.
வைணவ சம்பிரதாயப்படி வைணவத்தை வளர்த்தபெருமக்களைஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் என இரு வகையாகக் கூறுவர். ஆழ்வார்கள் எனப்படுவோர் அவதார ஞானிகள்ஆவர். ஆழ்வார்கள் என்பதற்கு பகவத் குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்கள் என்பது பொருள். ஆச்சாரியர்கள் என்பவர்கள் ஆழ்வார்களின் நெறியைப் பின்பற்றி வைணவத்தைப்பரப்பியவர்கள். அவர்கள் மீது கொண்ட பற்றே இக்கட்டுரைகளில்பொதிந்துள்ளன.
வைணவ ஆசார்ய வைபவம் என்ற இந்த அற்புதமான நூலில் வளவ.துரையன் அவர்கள் முக்கியமான ஆசாரியர்களைப் பற்றி எழுதியுள்ள இதயத்தைத் தொடும் வரிகளும் கூடவே தந்துள்ள படங்களும் இந்நூலினை அழியாப் புகழுக்கான அமரத்துவம் வழங்கும் என்பதில் ஐயமே இல்லை. இடையிடையே வழங்கியுள்ள பாசுரங்களும் சிறந்த ரசனையையும் பக்தி உருக்கத்தையும் வழங்குகின்றன. வாசிக்க, வாசிக்க எம்பெருமான் திருவடிகளில் நாம் நிற்பது போன்ற அனுபவம் சித்திக்கிறது. திரு. வளவ. துரையன் அவர்களுக்கும் பிரசுரித்த திரு. வையவன் அவர்களுக்கும் திருமால் எல்லாப் பெருமைகளையும் ஐஸ்வரியங்களையும் அளிக்க வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.
விதேயன்
எஸ்.லக்ஷ்மி நரசிம்ஹன்
LN copy
Laxmi Narasimhan.M.A.M.Phil20A2A,Mayura Apartments,Aziz Nagar 1st Street,Kodambakkam,Chennai600024,9840576450

1 comment:

  1. அடியேன் எழுதிய நூலை வாசித்து கருத்து எழுதிய நண்பருக்குப் பல்லாண்டு பல்லாண்டு

    ReplyDelete