Tuesday, 14 June 2016

மாறிச்செல்லும் மாற்றங்கள்


மாறி மாறி மாற்றங்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. நாம் தான் மாற்றம் மட்டுமே மாறாதது என்று  கருதுகிறோம். அது குறித்து மட்டுமின்றி அன்றாடம் வீட்டிலிருந்து  அலுவலகம் செல்லும் வழியில் நேரும் அனுபவங்களை  அற்புதமாகப் பதிவு செய்துள்ள இந்த நூலில் கவிதாயினி ஜி.ஜே . தமிழ்ச்செல்வி தம் கருத்துக்களை மிகச் சிறப்பாகப் பதிவு செய்கிறார்.இந்த வகை நூல் தமிழில் இது வரை வராத தனி ஜெனர். பலர் எழுத முன்னோடியாக இருக்கும் வண்ணம் அமைந்துள்ள இந்த நூல் தனி ரகம்   
பொதுவில் ஆண்கள் எந்த ரூபத்தில் இருந்தாலும் மூத்த மாதர்கள் கூட அவர்களுக்கு அடங்கி இருக்க வேண்டும் என்பதையே எதிர்பார்க் கிறார்கள். 
அன்று, மதிய உணவிற்காக வீட்டிற்கு என் பயணம்.  கொளுத்தும் சூரியன் தன் கோரக் கரங்களால் அக்கினிப் பூக்களை என் மேல் சொரிந்து தள்ள, வியர்வை முத்துக்கள் என் முகத்தை அலங்கரிக்க என் சீரிய சைக்கிள் ஓட்டத்தைத் தடுத்தது அந்த குரல். 
அடையாளம் மாறியிருந்தார் அவர். காதில் இருந்த ஒற்றைக் கம்மல் காணாமல் போய் இருந்தது. பொத்தான்கள் ஒழுங்காக அதனதன் இடத்தில் பொருந்தி யிருந்தன.
 “இது என் பொண்டாட்டி, இது என் பொண்ணு,” என்று அறிமுகப்படுத்தினார். 
மூன்று மாதங்களே ஆன பெண் குழந்தையை நான் எதிர்பார்க்காத தருணத்தில் என் கரங்களின் தவழ விட்டாள் அந்த பெண். 
“இவங்க தான் கையெழுத்து போட அன்னிக்கு எனக்குக் கத்துக்குடுத்தாங்க”  என்று மனைவியிடம் கூறினார் அவர். என்னவோ போல் இருந்தது எனக்கு. கைகளில் அந்தக் குழந்தை குறுகுறுவென்று நெளிந்தது. அது எனக்கு ஒரு புத்துணர்வு. புதியதொரு காந்த தாக்கம்.  ஒரு முத்தத்தை தவிர  அந்த குழந்தைக்குத் தருவதற்கு ஒன்று மில்லை.அந்தத் தருணத்தில்  என்னிடம்
புத்தகத்தில் குறிப்பிட்ட பாடங்களை  மனனம் செய்து,  தேர்வு நேரத்தில்  படித்ததை எல்லாம் கொட்டி விட்ட பிறகு , நாளடைவில் அது மறந்தே போகிறது. என் தாத்தா அவர் காலத்தில் படித்த பாடல்களை நினைவில் வைத்திருந்து எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். ஆனால் நான் படித்த மனப்பாடச் செய்யுள்கள் கூட இன்று என் நினைவில் இல்லை. எதையும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போதே நினைவில் நிற்கிறது. என் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் விதமாக நான் படித்த கல்வி இல்லை என்பது தான் உண்மை.  
கற்றல் என்பது பாடப் புத்தகங்களில் மட்டும் அல்லாமல், ஒவ்வொரு நிகழ்விலும், அனுபவத்திலும், பழகும் ஒவ்வொரு மனிதர்களிடமும், விலங்குகள் இடமிருந்தும் கூட நடைபெற வேண்டும். 
வெளியிட்டோர் 
 Dharini Padhippagam,                                                                                       
32/79 Gandhi Nagar 4th Main Road
Adyar, CHENNAI-600020
PH.24400135
Mobile:9940120341 

No comments:

Post a Comment