ஓரரசு உருவாக்கத்தில் படைகள் உருவாக்கப்படுவது உள்நாட்டுப் பாதுகாப்பிற்கும், வெளிநாட்டுப் பாதுகாப்பிற்கும் என இருமுனை நன்மைகளை உள்ளடக்கியது ஆகும். ஆனால், தன் அரசை நன்முறையில் பாதுகாப்பது என்ற நிலையிலிருந்து நழுவி, பிற நாட்டைத் தன் நாட்டோடு இணைத்து விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற ஆசை எழும்போது அங்குப் பகையும் போரும் ஏற்பட்டு, இருநில மக்களும் துன்பமடையும் ‹ழல் உருவாகிறது. மன்னர்களின் ஆசை பேராசையாக நீளும்போது ஏற்படும் தொடர்ந்த போர்களில் அரசு உருவாக்கத்தின் அடிப்படைகளான, மக்களை ஒன்றுபடுத்தல், முறையான பாதுகாப்பான வாழ்க்கை நல்குதல் என்ற பண்புகள் அடிபட்டுப் போகின்றன. அப்போது அரசு உருவாக்கத்தின் மீது கேள்விகள் எழுகின்றன. தலைமைப் பண்பலுள்ளவனின் பேராசையினால் பெருமளவில் மக்கள் கூட்டம் மடியும்போதும், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் துன்புறும்போதும் “களிறெதிர்ந்து பெயர்தல் காளைக்குக் கடனே” என்ற வீர உணர்வு சிலரின் சுயநலத்திற்காகப் பலியாக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டிருக்கிறதோ என்ற எண்ணம் எழுகிறது.
மக்களைக் கொண்டே மக்களைக் கொல்வதுதான் அரசோ? அதுதான் அரசியலா? ஆளும் பரிவினர் எப்போதும் தங்களின் நிலை மாறாமல் தங்களை நிலை நிறுத்திக் கொள்ளவும், தங்களின் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளவும், இந்த அரசு என்ற அமைப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
சங்க கால இலக்கியங்கள் இதை அழகாகப் பதிவு செய்துள்ளனர். பனிப்பரதேசத்தில் வாழும் எக்ஸிமோக்களிடம் அரசு என்ற அமைப்பு இல்லை. எனினும் ஒற்றுமையுணர்வோடு வாழ்கின்றனர். இவர்கள் இன்னும் வேட்டைச் சமூக அமைப்பல் வாழ்பவர்களாக இருப்பதற்கு இவர்கள் வாழும் நில அமைப்பு ஒரு காரணம். சிறு புல் கூட முளைக்காத கடும்குளிர் வீசும் பரதேசத்தில் வாழும் இம்மக்கள் மண் சார்ந்த நிலப்பகுதிக்கு வந்தால் இவர்களிடமும் போர்க்குணம் ஏற்பட்டு இவர்களுக்கென்று அரசு உருவாகியிருக்கும். இறந்த வீரர்களுக்கு நடுகல் நட்டு கள்ளும் சோறும் படைக்கும் அன்றைய பழக்கம் இன்று மிகவும் மாறுபட்டுள்ளது. இந்திய எல்லைப்புறங்களில் வீரமரணமடையும் ஒரு படைவீரரின் உடல் வெகுசீக்கிரம் அவரது வீட்டுவாசலுக்கு வருவதுமட்டுமல்லாமல் தகுந்த மரியாதையும் செய்யப்படுகிறது.
-ஜவஹர் பிரேமலதா
செத்துப் பிறக்கும் குழந்தையை வெட்டிப் புதைக்கும் வீர மறவர்கள் வாழ்ந்த நாடு இது. புறநானூற்றின் பல பாடல்களைப் பொருளுணர்ந்து படிக்கையில் படிப்போர் ரோமம் சிலிர்ப்பதைத் தவிர்க்கமுடியாது. அப்படிப்பட்ட நூலாகிய புறநானூற்றின் வீரம், விவேகம், அரசின் கடமை, மக்களின் கடமை, சான்றோர் கடமை போன்று பல தலைப்புகளில் விவாதிக்கும் ஆசிரியர் ஆண்கள், பெண்கள், பெற்றோர், சமூக ஆர்வலர்கள் போன்றோர்களைப் பற்றியும் விளக்குவது போற்றுதற்குரியது.
பண்டையத் தமிழர்களின் வீரத்தை முதன்மையாகவும் மற்ற எல்லா குணநல்களையும் அந்த வீரத்திற்குக் குறைவில்லாமலும் விமரிசிக்கும் ஆசிரியர் மிக ஆழ்ந்த புலமையுடன் இந்த நூலை ஆக்கியிருப்பது தெளிவாகத் தெரிகிறது.
படைவீரர்களின் குணநலன்களையும் போர்முறைகளையும் விளக்கும் திருமதி ஜவஹர் பிரேமலதா வாய்ப்பு கிடைத்தால் சீருடை அணிந்து ஒருசிங்கம் போல் கர்ஜிப்பார் என்பதை உறுதிசெய்கிறது இந்த நூல்.
இளைஞர் சமுதாயம் இந்த நூலைப் படிக்கப் பள்ளி, கல்லூரி மற்று சமூக ஆர்வலர்கள் ஏற்பாடு செய்வது காலத்தின் கட்டாயம். அரசு இந்த நூலைப் பெருமளவு வரவேற்று தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளிலெல்லாம் பரப்பிடவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
ஆசிரியருக்கு எனது பாராட்டுகள்.
கர்னல் பா. கணேசன், V.S.M
943.ஏ பிளாக், 17வது மெயின் ரோடு
அண்ணாநகர், சென்னை - 40
தொலைபேசி - 044-26163794.. செல்பேசி - 0-9444063794
No comments:
Post a Comment